For Daily Alerts
Just In
இடைத்தேர்தல்: கருணாநிதி 2 நாட்கள் பிரசாரம்
காஞ்சிபுரம்:
சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் கருணாநிதி 2 நாட்கள் பிரசாரம் செய்வார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
காஞ்சிபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.எம்.குமார், நேற்று திமுக துணைப்பொதுச் செயலாளர்மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பெண்களை நான் மானபங்கப்படுத்தியதாக என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இந்த வழக்கை நான் சட்ட ரீதியாகசந்திப்பேன். என்னை கைது செய்தால் அதையும் சந்திக்க நான் தயார்.
இடைத்தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக வேட்பாளர்களை ஆதரித்து 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். மே 10ம் தேதிகாஞ்சிபுரம் தொகுதியிலும், 11ம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்கிறார். அவருடன் கூட்டணி கட்சிதலைவர்களும் பிரசாரம் செய்கின்றனர் என்றார்.
Comments
Story first published: Tuesday, April 26, 2005, 5:30 [IST]