தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது: பர்னாலா
டெல்லி:
தமிழகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை, மாநிலம் அமைதியாக உள்ளது என தமிழக ஆளுநிர் எஸ்.எஸ்.பர்னாலாகூறியுள்ளார்.
ஆளூநர் பர்னாலா திடீரென நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து ஆளுநர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி வெளிப்படையாகவே புகார்கூறியுள்ளார்.
இந் நிலையில் திடீரென டெல்லி சென்ற ஆளுநர் பர்னால தமிழக நிலவரம் குறித்து கூறுகையில்,
தமிழகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை, அமைதியாக உள்ளது. நிர்வாகரீதியாக எந்த சிக்கலும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.
தமிழக ஆளுநர் பதவி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சென்னையில் தங்கியிருப்பதை நான் சந்தோஷமாக உணர்கிறேன் என்றார்பர்னாலா.
பர்னாலாவின் இந்த கருத்து ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு டானிக் போலவும், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும்அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications