நீதிமன்றத்தில் ஆஜராகாத காளிமுத்து
சென்னை:
ராபின்மெயின் வழக்கு தொடர்பாக தமிழக சபாநாயகர் காளிமுத்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.இதையடுத்து வழக்கு விசாரணை மே 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வங்கிகளில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடன் வாங்கி மோசடி செய்ததாக ராபின்மெயின் என்பவர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்தது. இவருக்கு உடந்தையாக இருந்ததாக தமிழக சபாநாயகர் காளிமுத்து மீதும் சிபிஐ குற்றம் சாட்டியது.
இதையடுத்து இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து காளிமுத்துநீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
காளிமுத்துவுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் மட்டுமே ஆஜரானார். அவர் கூறுகையில் 2 சட்டசபை தொகுதிகளுக்கானஇடைத்தேர்தல் மே 14ம் தேதி நடைபெற உள்ளதால் வழக்கு விசாரணையை அதற்குப் பிறகு வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதெரிவித்தார்.
ஆனால் நீதிபதி ரவீந்திரன், வழக்கு விசாரணையை மே 3ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அன்றைய தினம் வேண்டுமென்றால்காளிமுத்து ஆஜராகாமல் இருப்பதற்கு வேறு மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications