நீதிமன்றத்தில் ஆஜராகாத காளிமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராபின்மெயின் வழக்கு தொடர்பாக தமிழக சபாநாயகர் காளிமுத்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.இதையடுத்து வழக்கு விசாரணை மே 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வங்கிகளில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடன் வாங்கி மோசடி செய்ததாக ராபின்மெயின் என்பவர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்தது. இவருக்கு உடந்தையாக இருந்ததாக தமிழக சபாநாயகர் காளிமுத்து மீதும் சிபிஐ குற்றம் சாட்டியது.

கடந்த 1983ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இவ்வழக்குதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் அளித்த சம்மனை ரத்து செய்யக்கோரி காளிமுத்து தாக்கல் செய்தமனுவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து காளிமுத்துநீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

காளிமுத்துவுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் மட்டுமே ஆஜரானார். அவர் கூறுகையில் 2 சட்டசபை தொகுதிகளுக்கானஇடைத்தேர்தல் மே 14ம் தேதி நடைபெற உள்ளதால் வழக்கு விசாரணையை அதற்குப் பிறகு வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதெரிவித்தார்.

ஆனால் நீதிபதி ரவீந்திரன், வழக்கு விசாரணையை மே 3ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அன்றைய தினம் வேண்டுமென்றால்காளிமுத்து ஆஜராகாமல் இருப்பதற்கு வேறு மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+