கும்மிடிப்பூண்டி: மேலும் 3 மனுக்கள் தள்ளுபடி
திருவள்ளூர்:
கும்மிடிப்பூண்டி தொகுதியில் வேட்புமனு பரிசீலனையில் தவறு ஏற்பட்டதால் நேற்று 3 வேட்புமனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டன.
கும்மிடிப்பூண்டி தொகுதியில் 22 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 22மனுக்களும் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிச்சம்மாள் அறிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முதன்மை வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டால் மாற்று வேட்பாளரின் மனு தள்ளுபடிசெய்யப்படவேண்டும். ஆனால் பரிசீலனையின் போது இந்த முறை பின்பற்றப்படவில்லை. மொத்த வேட்பு மனுக்களும்ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன் பேரில் அதிமுக மாற்று வேட்பாளர் கிருஷ்ணன், திமுக மாற்று வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஐக்கிய ஜனதா தளம் மாற்றுவேட்பாளர் இளவரசு ஆகியோரின் மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 36(2) பி-இன் அடிப்படையில் அரசியல் சாசனச் சட்டம் 324வது பிரிவில் தரப்பட்டுள்ளஅதிகாரத்தின்படி கும்மிடிப்பூண்டியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த 3 மாற்று வேட்பாளர்களின் மனுவும் தள்ளுபடிசெய்யப்பட்டதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.