ாவை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்தவர் சாவு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறந்தார்.

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சம்பத் (வயது35). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்,நாகமநாயக்கன்பாளையத்தில் ஒரு மில்லில் கான்கிரீட் வேலை பார்த்தார்.

அப்போது அந்த மில்லின் உரிமையாளர் சண்முகம், தொழிலாளி சம்பத் கொண்டு வந்திருந்த கான்கிரீட் பலகையை உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை சம்பத் தட்டிக் கேட்ட போது சண்முகம், அவரது கூட்டாளிகளும் சம்பத்தை மிரட்டியதாககூறப்படுகிறது.

இது குறித்து சம்பத் சூலூர் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மனமுடைந்த சம்பத் கடந்த 25ம் தேதியன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்தார். உடனடியாக அவர்கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்நேற்று திடீரென சுயநினைவிழந்தார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இன்று காலை சம்பத் இறந்தார்.

இறந்த சம்பத்தின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாகஅங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். சம்பத்தின் உறவினர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சம்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரை சாதி பெயரை சொல்லி மிரட்டியதாகவும் சண்முகம்உட்பட 6 பேர் மீது சூலூர் போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் போலீஸார் சண்முகத்தின் நண்பர் சென்னியப்பன்,தர்மராஜ், மருதாசலம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் சண்முகம், அவரது மகன் குமார், மில் கண்காணிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்கள்பெங்களூருக்குத் தப்பிவிட்டதையடுத்து அவர்களைப் பிடிக்க தனிப் படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+