For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி அறிவுரை கூறலாமா?: பாஜக கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அடிக்கடி சட்டசபை புறக்கணிப்பில் ஈடுபடும் திமுகவினரின் தலைவரான, சட்டசபைக்கே போகாத திமுக தலைவர் கருணாநிதி,பாஜகவினரின் நாடாளுமன்றப் புறக்கணிப்பு குறித்து வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கு அறிவுரை கூற தகுதி படைத்தவர்அல்ல என்று தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மாட்டுத் தீவன ஊழல் விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பதவி விலகக் கோரி பாராளுமன்றத்தில்பாஜகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி முரசொலியில் எழுதியிருப்பதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது சுமார் ரூ.60 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்பதவியில் நீடிக்கக் கூடாது என்று வாஜ்பாய், அத்வானி ஆகியோர் வாய் திறந்தது உண்டா? இங்குள்ள பாஜக சட்டமன்றஉறுப்பினர்களாவது அதைக் கேட்டதுண்டா?

சங்கரராமன் கொலை வழக்கில் சாதாரண குற்றப் பத்திரிகையை கோவில் சன்னதியில் வைத்து பூஜை செய்துசங்கராச்சாரியார்களுக்கு வழங்கப்பட்டுள்ளதே. அதற்காக அவர்கள் மடத்தின் தலைமை பதவிகளில் நீடிக்கக் கூடாது என்றுபாஜக தலைவர்கள் நாவை அசைத்தது உண்டா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கருணாநிதியின் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் ராதாகிருஷ்ணன், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம்கூறியதாவது:

குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க கூடாது என்று பாஜகவலியுறுத்துகிறது. இதைக் கூறினால், எங்களுக்கு அறிவுரை கூற வந்து விட்டார் கருணாநிதி.

இது திமுகவின் கையாலாகாத தன்மையையே காட்டுகிறது. சட்டசபை புறக்கணிப்பில் ஈடுபட்ட திமுகவுக்கு, பாஜகதலைவர்களுக்கு அறிவுரை கூற அருகதை கிடையாது. சட்டசபைக்கே போகாத கருணாநிதிக்கு,பாஜக தலைவர்களுக்கு யோசனைகூற தகுதி கிடையாது என்று பதிலடி தந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X