For Quick Alerts
For Daily Alerts
Just In
காஞ்சி. கும்மிடிப்பூண்டி: மே 14ம் தேதி இடைத் தேர்தல்
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 14ம் தேதி நடக்கிறது.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏக்கள் மரணமடைந்ததையொட்டி அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் தொகுதியில் மரணமடைந்த எம்.எல்.ஏ. திருநாவுக்கரசின் மனைவி மைதிலியும், கும்மிடிப்பூண்டி தொகுதியில்கொலை செய்யப்பட்ட சுதர்சனம் எம்.எல்.ஏவின் மகன் விஜயகுமாரும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் பி.எம்.குமாரும், கும்மிடிப்பூண்டியில் திமுகவின் சார்பில் வெங்கடாசலபதியும்போட்டியிடுகின்றனர்.
இங்கு 14ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 16ம் தேதி நடக்கிறது.
Comments
Story first published: Thursday, July 17, 2008, 16:10 [IST]