For Daily Alerts
Just In
ஒரே நாளில் 2 பெண்களுக்குக் தாலி கட்டியவர் கைது!
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் ஊத்துமலையில், ஒரே நாளில் 2 பெண்களுக்குத் தாலி கட்டிய பலே நபரை போலீஸார் கைது செய்து சிறையில்அடைத்தனர்.
ஊத்துமலை உச்சி மாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேஷ். இவர் தனது கடைக்கு அருகே வசிக்கும் கோட்டைச்சாமிஎன்பவரின் மகள் கலாவை காதலித்தார். ஆனால் கலா அதை ஏற்க மறுத்து விட்டார்.
திருமணம் செய்து கொண்டாலும் கலாவை மறக்க முடியவில்லை முருகேஷால். திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் அவர் இருப்புகொள்ள முடியாமல் கலா வீட்டுக்குப் போனார். அங்கு யாரும் எதிர்பாராத வகையில், கையில் இருந்த தாலியை எடுத்து கலா கழுத்தில்கட்டினார்.
அதிர்ந்து போன கலா, உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் முருகேஷைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர். முருகேஷின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments
Story first published: Monday, May 2, 2005, 5:30 [IST]