அதிகார வெறியை வீழ்த்துவோம்: கருணாநிதி
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் வெற்றி கொண்டு, அதிகார வெறி கொண்டலைவோரை வீழ்த்துவோம் என்றுதிமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்று வெறி கொண்டலையும்ஆளுங்கட்சியினரும், சில அதிகார வர்க்கத்தினரும், சில காவல்துறையினரும், பணத்தை வாரி இறைக்கப் போவதாக செய்திகள்வந்து கொண்டிருக்கின்றன.
திமுகவினர், அவர்களது கோயபல்ஸ் பிரசாரத்திற்கு காது கொடுக்காமல், கருமமே கண்ணாக வேலை பார்க்க வேண்டும்.வாக்காளர்களை வீடு வீடாக சென்று சந்திக்க வேண்டும். வாக்குச் சாவடிகளில் அராஜகம் செய்ய நினைப்போரை,அடாவடித்தனத்தில் ஈடுபட முயற்சிப்போரை தடுத்திட வேண்டும்.
ஆளுங்கட்சியினரின் அக்கிரமச் செயல்களை தடுத்து ஜனநாயகக் குழந்தை விலை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்தலில் வெற்றி கொண்டு அதிகார வெறியை வீழ்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.