சுனாமிக்குப் பின்..: அந்தமானில் கலாம்

Subscribe to Oneindia Tamil

போர்ட் பிளேர்:

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 3 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று அந்தமான் சென்றார். இங்கு அவர் சுனாமி பாதித்த பகுதிகளைபார்வையிடுகிறார்.

பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிடுவதற்காக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று சென்னை வழியாகஸ்ரீஹரிகோட்டா சென்றார். ராக்கெட் விண்ணில் ஏவும் நிகழ்ச்சி முடிவடைந்த உடன் கலாம் விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம்அந்தமான் புறப்பட்டார்.

போர்ட் பிளேர் விமான நிலையத்தில் அவரை கவர்னர் ராம் காப்தே, எம்பியான மனோரஞ்சன் பாக்தா மற்றும் ராணுவ உயரதிகாரிகள்வரவேற்றனர். ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

இன்று அப்துல் கலாம், அந்தமானிலுள்ள புகழ் பெற்ற சிறைச் சாலையை பார்வையிடுகிறார். இதன் பிறகு இங்குள்ள பள்ளி, கல்லூரிமாணவர்களுடன் உரையாடுகிறார்.

நாளை சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிடும் அவர், கார் நிகோபார் தீவிலுள்ள பழங்குடியினரை சந்தித்து பேசுகிறார். நாளை மறுநாள்கலாம் டெல்லி திரும்புகிறார்.

குடியரசுத் தலைவரான பிறகு கலாம் இப்போது தான் முதன் முதலாக அந்தமான் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+