இலங்கை பெண் மதுரையில் படுகொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
இலங்கையைச் சேர்ந்த 60 வயது பெண்மதுரையில் படுகொலை செய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்தவர் அருணா தேவி. இவருக்கு மதுரை அழகப்பன் நகர் பகுதியில் வீடு உள்ளது. இலங்கையிலிருந்து அடிக்கடி இங்குவந்து தங்கிச் செல்வார். மதுரையில் நிலங்கள் வாங்கி விற்கும் தொழிலையும் அவர் செய்து வந்தார்.
இந்த நிலையில் அருணா தேவி தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகக் கிடந்தார். அவரது வீட்டிலிருந்து எந்தப் பொருளும்,பணம், நகையும் திருடு போகவில்லை.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையைச் சேர்ந்த மாணவி மயூரணியும் கொலையானது மதுரையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை வழக்கில்போலீசாரின் உதவியுடன், சோலைமலைத் தேவர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications