ஜெயேந்திரர்: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற மனு- அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள மனுவைவிசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் தமிழக போலீசார் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், முதல்வர் ஜெயலலிதாவே இதில்நேரடியாக கவனம் செலுத்துவதாகவும், காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படுவதாகவும் தனது மனுவில் ஜெயேந்திரர்கூறியுள்ளார்.
ஜெயேந்திரரின் வழக்கறிஞரான நரிமன் வாதிடும் போது, தமிழக முதல்வரும், தமிழக போலீஸும் இந்த வழக்கில் தனிக் கவனம்எடுத்துள்ளனர். இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய ரவி சுப்பிரமணியத்திடம் குறுக்கு விசாரணை நடந்த போது எஸ்.பி.பிரேம்குமாரின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பாக இருந்தன.
எனவே இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடந்தால் பாதிக்கப்பட்டவருக்கு சரியான நீதி கிடைக்காது என்றார்.
இதன் பிறகு இந்த மனு மீது கருத்து தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள்உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications