For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை இனப் படுகொலை: மீண்டும் ஒரு கண்துடைப்பு விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலைகள், கலவரம் குறித்து விசாரிக்க இலங்கை அரசு59 பேரை நியமித்துள்ளது.

1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக ராணுவமும், அரசும், சிங்கள வெறியர்களும் இணைந்து நடத்திய பெரும் கலவரத்தில்ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்.

இதனால் இலங்கையிலிருந்து சுமார் 80,000 தமிழர்கள் அகதிகளாக இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல வேண்டியநிலை ஏற்பட்டது.

இந்தக் கலவரம் குறித்த உண்மை நிலையை கண்டறிய 3 நபர் விசாரணைக் கமிஷனை இலங்கை அரசு கடந்த 20 ஆண்டுகளுக்குமுன் நியமித்தது. வெறும் கண்துடைப்புக்காக அமைக்கப்பட்ட இந்தக் கமிஷன், இனக் கலவரத்தில் 939 பேர் மட்டுமேபாதிக்கப்பட்டதாக அண்டப் புளுகுவிட்டது.

அவர்களுக்கு ரூ.32 கோடி நஷ்ட ஈடு வழங்கவும் அந்தக் கமிஷன் பரிந்துரைத்தது.

இந் நிலையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரிக்க 59 ஆய்வாளர்களைஇலங்கை அரசு நியமித்துள்ளது.

நஷ்ட ஈடு கோரி இன்னமும் 4,622 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந் நிலையில் புதிய விசாரணைக்கு அரசுஉத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவும் ஒரு கண்துடைப்பு விசாரணையாகவே கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X