சாலை பணியாளர்களுக்கு ஊதியம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கும் 3 மாத ஊதியம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் நியமிக்கபட்ட காரணத்தால் இவர்களை முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு நீக்கினார். இதையடுத்து பல சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த இரு உத்தரவுகளையும் தமிழக அரசு அமல்படுத்தாமல், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.
இதில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்த 10,000 பேருக்கும் 6 வாரத்துக்குள் 3 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications