2ம் உலகப் போர் வெற்றி விழா: ரஷ்யா சென்றார் பிரதமர்
டெல்லி & மாஸ்கோ:
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷ்யா வெற்றி கொண்டு, போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் 60 ஆண்டு விழாஇன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 50 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி மாஸ்கோவில்வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க சிங் இன்று காலை சிறப்பு விமானத்தில் ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். டெல்லி விமான நிலையத்தில்நிருபர்களிடம் பேசிய அவர்,
3 நாட்கள் மன்மோகன் சிங் ரஷ்யாவில் இருப்பார்.
இதற்கிடையே செசன்ய தீவிரவாதிகள், அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் பெரும் அச்சுறுத்தல்களுக்குஇடையே இந்த வெற்றி விழா நிகழ்ச்சி நடப்பதால் ரஷ்யாவில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மாஸ்கோ நகர் வான் பகுதியில் நுழையும் விமானங்களை சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்ய விமானப்படையின் சுகோய், மிக் ரக விமானங்கள் ரஷ்ய வான் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அதே போலவிமான எதிர்ப்பு, ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
50 நாட்டுத் தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஆயிரக்கணக்கான கமாண்டோக்கள் உள்பட 40,000 பாதுகாப்புப்படையினர் ஈடுபடவுள்ளனர்.
மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகையின் அருகில் இருந்து செஞ் சதுக்கத்தில் நடக்கவுள்ள ரஷ்யப் படைகளின் மாபெரும் ராணுவஅணிவகுப்பையும் 50 நாட்டுத் தலைவர்களும் பார்வையிட உள்ளனர்.
தீவிரவாதிகளைத் தடுக்க மாஸ்கோவில் பல இடங்களில் பாதாள ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி விழா நிகழ்ச்சி குறித்த செய்தி சேகரிக்க உலகம் முழுவதும் இருந்தும் நூற்றுக்கணக்கான நிருபர்கள் மாஸ்கோவில்குவிந்துள்ளனர்.