பொடா: நெடுமாறன் விடுவிப்பை எதிர்த்து தமிழக அரசு அப்பீல்
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 6 பேரை பொடா மறு ஆய்வுக் குழு விடுதலை செய்ததை எதிர்த்துசென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பரந்தாமன், தாயப்பன், பாவாணன் உள்ளிட்ட 6 பேரையும் கடந்த 2002ம்ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கூறி தமிழக போலீஸார் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஒராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வந்தனர்.நெடுமாறன் உள்ளிட்டவர்களை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது சரியா என்பது குறித்து பொடா மறு ஆய்வுக் குழு ஆய்வுசெய்தது.
ஆனால், அதை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளது. பொடா மறு ஆய்வுக் குழுவின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில்சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், குலசேகரன் ஆகியோர் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, பரந்தாமன் அளித்த ஒரு பேட்டி தொடர்பான மற்றொரு வழக்கில், அவரை பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்ததும் செல்லாது என்று மறு ஆய்வுக் குழு தற்போது தீர்ப்பு அளித்துள்ளது.
இதையும் எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications