கும்மிடிப்பூண்டி: தலித் ஓட்டு யாருக்கு?
கும்மிடிப்பூண்டி:
தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளை கவருவதில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கும்மிடிப்பூண்டியில் தலித் ஓட்டுக்கள் 30 சதவீத அளவுக்கு உள்ளது. இதனால், இந்த ஓட்டுக்களைப் பெற திமுக மற்றும் அதிமுகவேட்பாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இதுவரை தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளை எட்டிக் கூட பார்க்காத இரு கட்சிகளையும் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், இப்போதுகுடிசை குடிசையாக ஏறி இறங்கி ஓட்டு கேட்டு வருகின்றனர்.
திமுக அணியில் புரட்சி பாரதம் இருப்பதால், அந்தக் கட்சியைத் சேர்ந்த தலித் ஓட்டுக்கள் திமுக வேட்பாளருக்கு கிடைக்கும் எனஅக்கட்சி நம்புகிறது. அதேசமயம் தலித் மக்களிடையே செல்வாக்கு பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும்கணிசமான அளவுக்கு தலித்துகளின் வாக்குகளைப் பிரிப்பார் என்று கருதப்படுகிறது.
இப்படி தலித் ஓட்டுக்கள் பிரியும் வாய்ப்புகள் இருந்தாலும், தலித் மக்களிடையே தெளிவான நிலை காணப்படுகிறது.உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கே தங்களது வாக்கு என்பதில் தலித் மக்களில் பெரும்பாலானவர்களிடம் எண்ணம்நிலவுகிறது.
இத்தொகுதியில் உள்ள குடிசைவாசிகள், ரிக்ஷா ஒட்டுநர்கள், கூலி வேலை செய்பவர்களிடையே அதிமுகவுக்கு ஆதரவுஅமோகமாக காணப்படுகிறது. பெண்களிலும் அதிமுகவுக்கே ஆதரவு அதிகமாக காணப்படுகிறது.
மிகவும் பின் தங்கிய தொகுதியான கும்மிடிப்பூண்டியில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களை பெருவாரியாககவர்ந்துள்ளது அதிமுக. இதனால் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இரட்டை இலைக்கே வாக்களிப்பார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய வாக்கு வங்கியான, தலித்துகளின் வாக்குகளை முழுமையாகப் பெறுபவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.