பொடா மறு ஆய்வுக் குழு உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
பழ. நெடுமாறன் உள்ளிட்ட 6 பேரை பொடா வழக்கிலிருந்து விடுவிக்க பொடா மறு ஆய்வுக் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துதமிழக அரசு தொடர்ந்துள்ள மனு மீதான விசாரணை டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. மேலும் மறு ஆய்வுக்குழு உத்தரவுக்குஇடைக்காலத் தடை விதிக்கவும் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பரந்தாமன், சுப வீரபாண்டியன், பாவாணன், தாயப்பன், ஷாகுல் அமீதுஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எந்தவிதமான அடிப்படை முகாந்திரங்களும் இல்லை.
இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், பொடா மறு ஆய்வுக் குழுஉத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் அரசு கோரியிருந்தது.
இந்த மனுவை நீதிபதி குலசேகரன் விசாரித்தார். அதன் பின்னர், இந்த வழக்கை டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுவதாகவும், கோடைவிடுறை முடிந்த பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதேசமயம், தமிழக அரசு கோரியபடி, பொடா மறு ஆய்வுக் குழு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
நெடுமாறன் விடுதலையை எதிர்த்து அரசு அப்பீல்












Click it and Unblock the Notifications