ராஜஸ்தானில் ஜெர்மன் பெண் கற்பழிப்பு
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆட்டோ டிரைவர் மற்றும் அவனது கூட்டாளியால் ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பெண்கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்தது. அந்தப் பெண்ணிடம் இருந்து மொபைல் போன், பணம் ஆகியவற்றையும் இந்த இருவரும்கொள்ளையடித்துச் சென்றனர்.
லுப்தான்ஸா ஏர்லைன்சில் பணிபுரியும் அந்த 47 வயது பெண், பிராங்பர்ட்டில் இருந்து நேற்று இந்தியா வந்தார். காலையில்ஜோத்பூர் வந்த அவர், ஊரைச் சுற்றிப் பார்க்க மாலையில் ஆட்டோவில் ஏறினார்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பிய அந்தப் பெண் நள்ளிரவு 1 மணிக்கு சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார்கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவரையும் கூட்டாளியையும் இன்று அதிகாலை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.












Click it and Unblock the Notifications