For Daily Alerts
Just In
சந்திரிகாவின் இந்திய பயணம் திடீர் ஒத்திவைப்பு
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா தனது இந்திய வருகையை ஒத்தி வைத்துள்ளார்.
இந்த வார இறுதியில் இந்தியா வர இருந்த சந்திரிகா, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கஇருந்தார்.
இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கும் சந்திரிகா, சுனாமி நிவாரணப் பணிகளில் புலிகளுடன் இணைந்து செயல்படுவது குறித்ததிட்டம் தொடர்பாக இந்தியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக நார்வே உயர் மட்டக் குழு ஏற்கனவே டெல்லி வந்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, May 12, 2005, 5:30 [IST]