கூட்டணி கட்சிகளால் உயிருக்கு ஆபத்து: சந்திரிகா
கண்டி:
சுனாமி நிவாரணப் பொருட்களை அளிப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள நான்முடிவெடுத்துள்ளதால் என்னுடைய கூட்டணி கட்சிகளாலேயே எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறேன் என்றுஇலங்கை அதிபர் சந்திரிகா கூறியுள்ளார்.
சுனாமியால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலும் தமிழகளின் வடக்கு, கிழக்கு பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன.ஆனால், பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணிகளை செய்வதில் இலங்கை அரசு மெத்தனம் காட்டியது.
ஆனால், அதை தமிழர் பகுதி மறு கட்டமைப்புக்கு வழங்குவதிலும் இலங்கை அரசு பாரபட்சமாக நடந்து கொண்டது. இதைபுலிகள் வன்மையாக கண்டித்ததோடு, மீண்டும் போர் மூளும் என எச்சரித்திருந்தன.
இதைத் தொடர்ந்து இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வது எனதீர்மானிக்கப்பட்டது. இதற்கான முயற்சிகளை நார்வே முன்னின்று செய்தது. ஆனால், இதற்கு அதிபர் சந்திரிகாவின் கூட்டணிக்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்பட்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று எச்சரித்தன.குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பிரமுனா தான் சந்திரிகா அரசுக்கு கடும் மிரட்டல் விடுத்தது.
இந் நிலையில் இலங்கைக்கு சுனாமி நிவாரண உதவி வழங்கும் நாடுகள் கலந்து கொண்ட கூட்டம் கண்டியில் நடைபெற்றது.இதில் அதிபர் சந்திரிகா பேசுகையில், சுனாமி நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம்செய்ய தீர்மானித்துள்ளதால் எனக்கும், என்னுடன் இருப்பவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஆபத்து எனக்கு வெளியில் இருந்து வர வாய்ப்பில்லை. எனது கூட்டணிக் கட்சிகளால் ஆபத்து ஏற்படப் போகிறது என்றார்.












Click it and Unblock the Notifications