பரவை முனியம்மாவுக்கு மாரடைப்பு
கோவை:
பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்படங்களில் நடித்து வருபவருமான பரவை முனியம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை அருகே உள்ள பரவை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மா. தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான நாட்டுப்புறப்பாடகியான முனியம்மா, தூள் படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். சிங்கம் போல நடந்து வர்ரான் பாடல் மூலம் தமிழர்கள்இருக்கும் இடமெல்லாம் பிரபலமான முனியம்மா தற்போது ஏராளமான படங்களில் நடித்தும் பாடியும் வருகிறார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள முனியம்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் டெல்லியில் பரவை முனியம்மா கலந்து கொண்ட கலை நிகழ்ச்சியின் போது தீவிபத்து ஏற்பட்டு அதிலிருந்துமுனியம்மா உள்ளிட்ட கலைஞர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.