புதிய தலைமை தேர்தல் கமிஷனராக டாண்டன் பதவியேற்றார்
டெல்லி:
புதிய தலைமை தேர்தல் கமிஷனராக பி.பி. டாண்டன் இன்று பதவியேற்றார்.
தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த கிருஷ்ணமூர்த்தியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று அவர்ஓய்வு பெற்றார். நேற்று அவர் ஓய்வு பெறும் போது அரசியல் கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசினார்.
நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், சில அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷன் எடுத்த முடிவுகள் பற்றி புகார்கள் கூறுவதில்சந்தோஷமடைகின்றன. தேர்தல் கமிஷனின் நம்பகத் தன்மையை அரசியலாக்கி, கேலிக்குரியதாக்கி வருகின்றன. இந்தப் போக்குமிகவும் வருந்தத் தக்கது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வேட்பாளர், கட்சிகளுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வழங்கவேண்டும் என்றார்.
கிருஷ்ணமூர்த்தியின் இந்த ஆவேசப் பேச்சு அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக பி.பி. டாண்டன் இன்று பதவியேற்றார். பதவியேற்ற உடன் அவர்நிருபர்களிடம் கூறுகையில், சப்தரிஷி விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டு வரும் சர்ச்சைகள் தேவையில்லாதஒன்றாகும் என்றார்.












Click it and Unblock the Notifications