தேர்தல் தோல்வி: கூடுகிறது திமுக செயற்குழு!
சென்னை:
இடைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது குறித்து விவாதிக்க அக் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் ஜூன் 2ம்தேதி கூட்டப்பட்டுள்ளது.
இதில் அனைத்து தலைமை செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்திடும் தூய பணிகள்: கருணாநிதி
இதற்கிடையே சட்டசபை இடைத் தேர்தலில் திமுக தோல்வியுற்றாலும், தூய பணிகளை திமுகவினர் தொடர்ந்துமேற்கொள்வார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் வெற்றி பெற ஆளுங்கட்சியினர்எத்தனை கோடிகளை செலவழித்தார்கள் என்பதும், எந்த அளவுக்கு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்கள் என்பதும்அனைவருக்கும் தெரியும், குறிப்பாக வெற்றி பெற்றவர்களுக்காக வாக்களித்தவர்களுக்குத் தெயும்.
1967க்குப் பிறகு தமிழகத்தில் மிகப் பெரும் மொழிப் புரட்சி நடந்தது. அதன் பின்னர் நடந்த தர்மபுரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தோல்வியுற்றார். ஆனால் அதன் பின்னர் வந்த பொதுத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுஅண்ணா தலைமையில் ஆட்சி அமைத்ததை வரலாறு கூறும்.
இந்த இடைத் தேர்தல் வெற்றி அதிமுக ஆட்சி குறித்த கருத்துக் கணிப்பாக அமையாது.
இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைப் பாராட்டி ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுதெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தாம் மட்டுமே தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றதாக தம்பட்டம் அடித்துள்ளார் அம்மையார்.
திமுகவைப் பொருத்தவரை தோழமைக் கட்சியினரையும் மதித்து, திமுக மாநாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளச் செய்து வருகிறது. அதுதான் திமுகவின் பண்பாடு, பழக்கம்.
தேர்தல் வெற்றி தொடர்பாக அம்மையார் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் ஆணவமே தலை தூக்கி நிற்கிறது. எது எப்படிஇருந்தாலும் திமுகவினரின் தூய பணிகள் தொடர்ந்து நடந்திடும். வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் கோவை மண்டல மாநாடுமிகச் சிறப்பாக வெற்றிகரமாக நடந்திடும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.