நீதிபதி ராமன் மருமகன் கொலை: கொலையாளிக்கு ஆயுள்
திருச்சி:
வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் தலைவரான நீதிபதிராமனின் மருமகன் வெங்கடேசன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், இன்னொருவருக்கு 7ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே திருச்சியில் ராமனின் மருமகன் வெங்கடேசன் சிலரால் அவரது வீட்டில்வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தவசிமுத்து, அருண், தாமோதரன், ராஜா உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.இவர்கள் மீது திருச்சி 2வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இன்று இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 8 பேல் தவசிமுத்து மற்றும் அருண் ஆகியோரைத் தவிர மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.இவர்கள் மீதான சதித் திட்ட புகார்களுக்கு உரிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிஅறிவித்தார்.
தவசிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், அருணுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications