கடந்த தேர்தலை விட அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகள்!
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்றதை விட அதிமுக வேட்பாளர்கள் இம்முறை கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளனர்.
ஆனால் தற்போது போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அவரது மனைவியான மைதிலி திருநாவுக்கரசு, கணவரை மிஞ்சும்வகையில், 87,274 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதேபோல கும்மிடிப்பூண்டியிலும் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சுதர்சனம் 73,467 வாக்குகள் பெற்றுவெற்றி பெற்றார். இப்போது போட்டியிட்டுள்ள அவரது மகன் கே.எஸ். விஜயக்குமார் 83,716 வாக்குகள் பெற்றுள்ளார்.
வாக்கு வித்தியாசமும் இந்த முறை கும்மிடிப்பூண்டியில் கூடியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 24,958 வாக்குகள்வித்தியாசத்தில் சுதர்சனம் ஜெயித்தார். ஆனால் விஜயக்குமாரோ, 27,162 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவைத்தோற்கடித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது அதிமுகவுடன் பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் உடன் இருந்தன. இம்முறை தனித்தே போட்டியிட்டு கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் அதிமுக பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications