தேர்தல் தோல்வியால் கூட்டணியில் பிளவு வராது: கருணாநிதி
டெல்லி:
சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்வியுற்றதால், திமுக தலைமையிலான 7 கட்சிக் கூட்டணியில் விரிசலோ,பாதிப்போ ஏற்படாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்து ஒரு வருடம் ஆகிறது. இதையொட்டி கூட்டணிக் கட்சித்தலைவர்களுடன் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லி சென்ற கருணாநிதி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகள்பெரிய அளவில் விவாதிக்கப்படக் கூடிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்றவை அல்ல. அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை.
இந்த முடிவினால் தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் (7 கட்சி கூட்டணி) பிளவு ஏற்படாது, பாதிப்பும் ஏற்படாது.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கூட்டணிக் கட்சியினருடன் விரைவில் விவாதிப்பேன் என்றார் கருணாநிதி.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அது குறித்து தான்இன்னும் கணிக்கவில்லை என்றார் கருணாநிதி.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்தது. அதன் பேரில் செல்கிறேன். கடந்த ஒரு ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமயிலானமத்திய அரசு பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. இதற்காகப் பிரதமரை பாராட்டுவேன் என்றார்.
வரும் 22ம் தேதி டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஓராண்டு நிறைவு விழாப் பொதுக் கூட்டமும் பேரணியும்நடக்கிறது. இதில் ராமதாஸ் பங்கேற்கிறார். ஆனால், கருணாநிதி பங்கேற்க மாட்டார் என்றே தெரிகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அமெரிக்காவில் உள்ளதால் அவரும் இக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை.
இந்த கொண்டாட்டத்தில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை என காங்கிரஸ் அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரிக்கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications