இலங்கை செல்ல முயன்ற 9 அகதிகள் கடலில் மூழ்கி பலி

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்திலிருந்து கள்ளப் படகு மூலம் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த 9 இலங்கைத் தமிழர்கள் கடலில் மூழ்கிபரிதாபமாக இறந்தனர்.

இலங்கையில் அமைதி திரும்பி வரும் நிலையில், தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் தாயகம் திரும்ப ஆர்வம்கொண்டுள்ளனர். இருப்பினும் இவர்களை திருப்பி அழைத்துக் கொள்வது குறித்து இதுவரை இலங்கை அரசு உறுதியான முடிவைஅறிவிக்காமல் உள்ளது.

இருப்பினும் பல இலங்கைத் தமிழர்கள், தாங்கள் தங்கியுள்ள முகாம்களை விட்டு ரகசியமாக வெளியேறி, ஏஜென்டுகளைப்பிடித்து, கள்ளத்தனமாக படகுகள் மூலம் தாயகம் திரும்பி வருகின்றனர். இவர்களில் பலர் அவ்வப்போது கடற்படையால்மறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில், கடந்த 14ம் தேதி பாம்பன் அருகே உள்ள குந்துகால் கடல் பகுதியிலிருந்து 17 இலங்கைத் தமிழர்கள் படகுஒன்றில் இலங்கைக்கு சென்று கொண்டிருந்தனர். இரு நாட்டு கடல் படையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பி இலங்கைஎல்லைக்குள் நுழைந்த அவர்களது படகு, ஒன்றாம் தீடை என்ற மணல் திட்டு அருகே சென்றபோது திடீரென கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த 17 பேரும் கடலில் மூழ்கினர். இதைப் பார்த்ததும், இலங்கை மீனவர்கள் விரைந்து வந்து கடலில்மூழ்கியவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், அதற்குள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாகஇறந்தனர். 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்னொருவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மீட்கப்பட்ட 7 பேரும் தலைமன்னார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+