டெல்லியில் தியேட்டர்களில் குண்டு வெடிப்பு: தீவிரவாதி கைது
டெல்லி:
டெல்லியில் நேற்று இரவு 2 சினிமா தியேட்டர்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் பலியானார். 50 பேர்படுகாயமடைந்தனர். இது தொடர்பாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.
மத்திய டெல்லி பகுதியில் உள்ள லிபர்டி மற்றும் படேல் நகரில் சத்யம் ஆகிய தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் நேற்று இரவுகுண்டுகள் வெடித்தன. லிபர்டி தியேட்டரில் இரவு 8.25 மணியளவில் முதல் வெடிகுண்டு வெடித்தது. கடைசியில் உள்ள ஐந்தாவதுவரிசையில் குண்டு வெடித்தது.
இதில் ஒருவர் உடல் சிதறி பலியானார். மேலும், 50 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் தியேட்டர் ஊழியர்கள்ஓடிச் சென்று பார்த்தனர். வெடிகுண்டு வெடித்ததை அறிந்து அங்கிருந்து அலறிக் கொண்டே ஓடினர். சினிமா பார்க்க வந்தவர்களும்விஷயம் அறிந்து பீதியுடன் வெளியில் ஓடினர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடனடியாக மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. தியேட்டரின் வேறுபகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்தப்பட்டது. சினிமா பார்க்க வந்தவர்கள் அனைவரும்உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.
இதேபோல சத்யம் தியேட்டர் கழிவறையில் அடுத்த குண்டு வெடித்தது. இரவு 8.40 மணியளவில் இங்கு குண்டு வெடித்தது. இதில் 7 பேர்காயமடைந்தனர். இது குறித்து அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சினிமா பார்க்க வந்தவர்கள் உடனடியாக பாதுகாப்பாகவெளியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரை மணி இடைவெளிக்குள் இரண்டு தியேட்டர்களில் குண்டு வெடித்தது டில்லியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. மற்றதியேட்டர்களுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரே குழப்பம் நிலவியது.
வெடிகுண்டு வெடித்த தியேட்டர்கள் இரண்டிலும், சன்னி தியோல் நடித்த ஜோ போலே சோ நிகால் என்ற இந்தி படம் ஓடிக் கொண்டிருந்தது.இந்த படத்துக்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களில் யாராவது தியேட்டர்களில் வெடிகுண்டு வைத்திருக்கலாம்என்று முதலில் போலீஸார் சந்தேகித்தனர்.
ஆனால் இந்த குண்டு வெடிப்புக்கு லஷ்கர் இ தொய்பா இயக்கம் தான் காரணம் என்று தெரியவந்தது. போலீஸாரின் தீவிர விசாரணையில்இந்த அமைப்பை சேர்ந்த முகமது இர்ஷாத் கைது செய்யப்பட்டான்.
பிரதமர் கண்டனம்:
தியேட்டரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் அமைதியாகஇருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், கவர்னர் ஜோஷி ஆகியோர் பார்த்து உடல் நலம் விசாரித்தனர்.
எல்லைகளுக்கு சீல் வைப்பு:
குண்டு வெடிப்பை தொடர்ந்து டெல்லியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி எல்லைப் பகுதி முழுவதும் சீல்வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
இதற்கிடையே வடக்கு டெல்லி பகுதியில் இன்று அதிகாலையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இன்று அதிகாலை 5.15மணியளவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார்.