வணிகர்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல: திருமாவளவன்
சிதம்பரம்:
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தப்படும் போராட்டம் வணிகர்களுக்கு எதிரானது அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்திருமாவளவன் கூறியுள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள திருவேட்குளம் என்ற கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர் இரணியன் படத் திறப்பு விழாவுக்கு வந்ததிருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழில் தான் பெயர்ப் பலகைகள் எழுதப்பட வேண்டும் என்று அரசு ஆணையே உள்ளது. அதை அமல்படுத்த அரசு உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
இடைத் தேர்தல் யாருமே எதிர்பாராதது. ஆனால் நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், தனித்தன்மை மற்றும்தற்சார்பு நிலையை நிலைநாட்டவே நாங்கள் போட்டியிட்டோம், இனியும் போட்டியிடுவோம். எனவே இதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் திமுக கூட்டணிக்கு இது மிகப் பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அவர்களது செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
எங்களை, தாழ்த்தப்பட்ட மக்களை, அரசியல் சக்தியாக மதிக்கிறவர்களிடம் மட்டுமே நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம். அப்படிஇல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.
தமிழகத்தைப் பொருத்தவரை 3வது அணி தேவைப்படுகிறது. ஆனால் அந்த 3வது அணிக்கு தலைமையேற்று செயல்படுத்தத் தேவையானவலுவான சக்தி இன்னும் அரசியல் களத்திற்கு வரவில்லை என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications