ஜெ.வுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:
பெண் மனித வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு மேலும்அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் மனித வெடிகுண்டு ஜெயலலிதாவைத் தீர்த்துக் கட்ட அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகமத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்புமேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இசட் பிரிவு கருப்புப் பூனைப் பாதுகாப்புப் படை வளையத்தின் கீழ் ஜெயலலிதா உள்ளார். தற்போது கூடுதலாகநியமிக்கப்பட்டுள்ள போலீஸாரையும் சேர்த்து 70 போலீஸார் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதேபோல, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளபோலீஸார், காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் முதல் ரிசர்வ் வங்கி வரை கண்காணிப்புப் பணியை மேற்கொள்வார்கள்.
வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை இவர்கள் கண்காணித்து வருவார்கள். சந்தேகத்திற்கு இடமானவர்களைதடுத்து நிறுத்தி விசாரிக்கவும் இவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர கோட்டையில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டைக்குள் வரும் வாகனங்களைசோதனையிடுவதும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் பொதுமக்கள் குறை தீர்ப்புப் பிரிவிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு வருவோர் தீவிரசோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர்.
கூடுதல் பாதுகாப்பு காரணமாக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications