For Daily Alerts
Just In
இந்தியாவும், ரஷ்யாவும் அமைதிக்காக பாடுபடவேண்டும்- கலாம்
மாஸ்கோ:
உலக அமைதிக்காக இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பாடுபடவேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில்குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேசினார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மாஸ்கோவிலுள்ள ரஷ்ய அதிபர் மாளிகையில் அதிபர்புடின், கலாமுக்கு வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கலாம் பேசுகையில், இந்தியாவும், ரஷ்யாவும் பல்லாண்டு காலமாக நல்லநட்புறவுடன் இருந்து வருகிறது. இந்த நட்புறவு இனியும் தொடர வேண்டும்.
உலகில் அமைதி இருந்தால் தான் எதையும் சாதிக்க வேண்டும். உலக அமைதிக்காக இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பாடுபடவேண்டும்.21ம் நூற்றாண்டு நமக்கு மிகப்பெரிய சவால்களை தர காத்திருக்கிறது என்றார்.
Comments
Story first published: Tuesday, May 24, 2005, 5:30 [IST]