பீகார் சட்டசபை கலைப்பு: கருணாநிதி, ராமதாஸ் வரவேற்பு
சென்னை:
பீகார் சட்டசபையைக் கலைத்தது நியாயமானது தான். இல்லாவிட்டால் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏக்களை விலைக்குவாங்கும் பாஜகவினரின் முயற்சி பலித்திருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர்கூறியுள்ளனர்.
பீகார் சட்டசபை கலைப்பு குறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பீகாரில் ஜனநாயக ரீதியில் ஆட்சி அமைய வழிகாணப்பட்டுள்ளது. அங்கு ஆளுநர் மீது குறை கூற நியாயம் இல்லை. அவர் என்ன செய்தார்? ஆட்சி அமைந்து அமைச்சர்களுக்குபதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்தாரா?
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட சக்திகள், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்குவாங்கும் குதிரை வியாபாரத்தின் மூலம் ஆட்சியைப் பிடிக்க நடத்திய சூழ்ச்சி இந்தக் கலைப்பின் மூலம் தகர்க்கப்பட்டு விட்டது.
கட்சித் தாவல் தடைச் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
படிப்பது ராமாயணம், இடிப்பது ராமர் கோவில் என்ற வாசகம் பாஜகவுக்கு முற்றிலும் பொருத்தமாக உள்ளது. பாஜகவினர் வெளியில் பேசிவருவதற்கும், நடைமுறையில் செயல்படுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் தெரிகின்றன. இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இலலைஎன்பது மீண்டும் ஒரு முறைவெட்ட வெளிச்சமாகியுள்ளது.
பீகாரில் மதச் சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு நின்று பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications