இலங்கை தமிழர்கள் கொலை: விசாரணைக் கமிஷன் அமைக்க கோரிக்கை
வாஷிங்டன்:
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து விசாரணை நடத்த சுதந்திரமான ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்க வேண்டும்என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வாஷிங்டனிலுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு மையத்தின் ஆசிய பகுதிகளுக்கான இயக்குனர் பிராட்ஆடம்ஸ் கூறுகையில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் வந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரைசுமார் 200 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் வரவேற்கக் கூடியது தான். ஆனால் இதைப்பயன்படுத்தி சிலர் தங்களின் எதிரிகளை பழி வாங்குகின்றனர்.
கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படுகின்றனர். ஆனால் இதை விடுதலைப்புலிகள் மறுக்கின்றனர்.
எனவே இது குறித்து விசாரிக்க சுதந்திரமான ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications