For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார் இறக்குமதி வழக்கு: நடராஜன் மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

லண்டனிலிருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 1994ம் ஆண்டு, லண்டனிலிருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்தது தொடர்பாக, விலையைக் குறைத்து, போலிஆவணங்களைத் தாக்கல் செய்ததாக நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி நடராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவைஇன்று விசாரித்த நீதிபதி சர்க்காரியா உசேன், இந்த வழக்கில் ஏற்கனவே 9 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விட்டனர்.

மேலும், ஊழல் வழக்குகளுக்கு தடை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்குக்குத்தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X