திமுக கூட்டணி விரைவில் உடையும்: அமைச்சர் வளர்மதி
சென்னை:
இடைத்தேர்தல் தோல்வியால் திமுகவை விட்டு ஓட அதன் கூட்டணிக் கட்சிகள் நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன அமைச்சர் வளர்மதிகூறினார்.
வட சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் வளர்மதிகலந்து கொண்டு பேசுகையில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரத்தில் வென்றால் மு.க.ஸ்டாலினுக்கு தலைவராக முடிசூட்ட தீர்மானித்திருந்தார்கள். அது இப்போது முடியாமல் போய்விட்டது.
திமுக கூட்டணியில் நிறைய தலைவர்கள் உள்ளனர். அனைவருமே படையெடுத்து போய் ஓட்டு கேட்டனர். அதிமுகவில் முதல்வர்ஜெயலலிதா மட்டும் தான் ஓட்டுக் கேட்டார்.
அதிகார துஷ்பிரயோகம் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக தேர்தல் நடந்தது.
அதிமுகவின் வெற்றியால் திமுக கூட்டணி கலகலத்து போய் உள்ளது. திமுகவை விட்டு ஓட அதன் கூட்டணி கட்சிகள் நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணி உடையும்.
சட்டசபை பொதுத்தேர்தலில் எத்தனை கட்சிகள் எதிர்த்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றார் வளர்மதி.












Click it and Unblock the Notifications