சென்னை பெருநகர காவல் திட்டம்: மத்திய அரசு ஏற்பு
சென்னை:
பெருநகர காவல் துறையை நவீனப்படுத்த முதல்வர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு ஏற்றுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருகி வரும் நகரமயமாக்கலின்விளைவாக காவல் துறையில் எழுந்துள்ள புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைஏற்படுத்தவும்,
இதன் அடிப்டையில் 2005-2006ம் ஆண்டுக்கான காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஒரு துணை திட்டமாகசென்னை பெருநகர காவல் திட்டத்தை சேர்த்து கருத்துரு அனுப்ப கேட்டுக் கொண்டதுடன் இந்த கருத்துரு குறித்துவிவாதிப்பதற்காக டெல்லியில் ஒரு சிறப்புக் கூட்டத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடத்தவும் உள்துறை முடிவெடுத்துள்ளதுஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் செங்கை கிழக்கு காவல் மாவட்டத்தில் அமைந்திருந்த 41 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களும், 7 அனைத்துமகளிர் காவல் நிலையங்களும் சென்னை மாநகர காவல் துறையுடன் இணைக்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக காவல் நிலையங்களை கொண்ட பெருநகரம் என்ற பெருமையை சென்னை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications