For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை பெருநகர காவல் திட்டம்: மத்திய அரசு ஏற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெருநகர காவல் துறையை நவீனப்படுத்த முதல்வர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு ஏற்றுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருகி வரும் நகரமயமாக்கலின்விளைவாக காவல் துறையில் எழுந்துள்ள புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைஏற்படுத்தவும்,

மனித ஆற்றல் தேவைகளை நிறைவு செய்யவும் மாநில அரசுகளுக்கு உதவிடும் வகையில் பெருநகர காவல் நவீனமயமாக்கல்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் சட்டம்,ஒழுங்கு குறித்த மாநாட்டில் தமிழக முதல்வர் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன் அடிப்டையில் 2005-2006ம் ஆண்டுக்கான காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஒரு துணை திட்டமாகசென்னை பெருநகர காவல் திட்டத்தை சேர்த்து கருத்துரு அனுப்ப கேட்டுக் கொண்டதுடன் இந்த கருத்துரு குறித்துவிவாதிப்பதற்காக டெல்லியில் ஒரு சிறப்புக் கூட்டத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடத்தவும் உள்துறை முடிவெடுத்துள்ளதுஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் செங்கை கிழக்கு காவல் மாவட்டத்தில் அமைந்திருந்த 41 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களும், 7 அனைத்துமகளிர் காவல் நிலையங்களும் சென்னை மாநகர காவல் துறையுடன் இணைக்கப்பட்டது.

இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக காவல் நிலையங்களை கொண்ட பெருநகரம் என்ற பெருமையை சென்னை பெற்றுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X