மாஸ்கோவில் கவிதை வாசித்த கலாம்
மாஸ்கோ:
ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தைபார்வையிட்டார். அப்போது அவர் கவிதை வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். கலாமுக்குஅவர் விருந்தளித்தார்.
வாழ்க்கை என்பது பீனிக்ஸ் பறவை போன்றது. சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை உயிர்த்தெழுவது போல் நாம் புத்துயிர் பெற்றுசவால்களைச் சமாளிக்க தயாராக வேண்டும். போர் என்பது திணிக்கப்படும் ஒன்று.
இருப்பினும் நாட்டுக்காக உயிர்நீத்தவர்களின் தியாகம் ஒளிர்கிறது. உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவுகள் வாழ்க்கையைஅழகுபெறச் செய்கிறது. அவர்களது சாம்பல், அவர்களுடைய உன்னத வாழ்க்கையை நமக்கு நினைவு கூர்கிறது என்று அந்தகவிதையில் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவர் அந்த கவிதையை ரஷ்ய அதிபரிடம் கலாம் அளித்தார்.
அப்துல் கலாமின் ரஷ்ய பயணம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இன்று மாலை அவர் சுவிட்சர்லாந்து புறப்பட்டு செல்கிறார்.கலாம் சுவிட்சர்லாந்து செல்வதையொட்டி அந்நாட்டில் நாளை அறிவியல் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications