தேர்தலில் போட்டி: வீரப்பன் மனைவி முடிவு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

சட்டசபை தேர்தலில் போட்டியிட வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி முடிவு செய்துள்ளார்.

அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மைய திறப்பு விழா மேட்டூர் அருகே உள்ள கோயில்பாளையத்தில்நடந்தது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுவாழ்வு மைய திறப்பு விழாவிற்கு வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி, தனது மூத்த மகள் வித்யா ராணியுடன் வந்திருந்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என்னிடம் உதவி கேட்கின்றனர்.

நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும்? பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. திமுகஆட்சியில் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு உதவி கிடைத்தது.

எனவே ஆட்சி மாறினால் தான் இவர்களுக்கு உதவி கிடைக்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு உள்ளது.அதற்கு பண உதவி தேவைப்படும். பண உதவி கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்.

ஆனாலும் இது குறித்து எனது குடும்பத்தாரிடம் நன்கு ஆலோசித்த பிறகே முடிவெடுப்பேன் என்றார் முத்துலெட்சுமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+