For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாப்பாபட்டி: மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட தலித் பஞ்சாயத்துக்களில் முறைப்படி தேர்தல் நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கு முறைப்படி தேர்தல் நடத்தவேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ராஜினாமா செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில்மாவட்டத் தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது. சென்னை, மதுரை, கோவை, நாகை, சேலம், வேலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X