For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராதாகிருஷ்ணன் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த காம வெறியன், ராதாகிருஷ்ணன் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது. அவருக்கு எதிராக 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சுங்கத்துறை ஊழல் கண்காணிப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். சிறுமிகளை தத்தெடுத்து அவர்களிடம்தனது காம வெறியைத் தணித்துக்கொண்டார். அவரால் பாதிக்கப்பட்ட ஆனந்தி, பிரேமா, ரிவேண்டா ஆகிய சிறுமிகள் கொடுத்தபுகாரின் பேரில் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் 20க்கும் மேற்பட்ட சிறுமிகளை ராதாகிருஷ்ணன் சீரழித்தது தெரியவந்தது. இந்த வழக்கு தவிர குண்டர் சட்டத்தின்கீழும் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் தவிர அவருக்கு சிறுமிகளை அழைத்து வந்த புரோக்கர் கிட்டுஎன்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராதாகிருஷ்ணன் வழக்கில் போலீஸ் விசாரணை முடிந்து, தற்போது குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகள் தவிர மேலும் 3 பேர் நீதிமன்றத்தில், ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வாக்குமூலம்கொடுத்துள்ளனர். விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X