ஜூன் 21ல் கண்டதேவி கோவில் தேரோட்டம்!
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்திருத்தேரோட்டம் ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீவிர போலீஸ் பாதுகாப்புக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், கடந்த 1998ம் ஆண்டு தேர் வடம் பிடித்து இழுக்க தலித்துகளுக்கும் உரிமை உள்ளது என்பதை சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்காக போட்டு, தலித்துகளும் தேர் இழுக்கலாம் என்ற தீர்ப்பை புதிய தமிழகம் கட்சி பெற்றது.
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரு சமூக மக்களையும் ஈடுபடுத்தி தேர்த் திருவிழாநடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உளவுப் பிரிவு போலீஸாரும் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.