கோவை கோர்ட்டில் ஜெயலட்சுமிக்கு குற்றப்பத்திரிக்கை நகல்

Subscribe to Oneindia Tamil

கோவை:

ரூ. 1.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஜெயலட்சுமிக்கு கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை நகல்வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அணுகிய ஜெயலட்சுமி, தான் டி.எஸ்.பி. ராஜசேகரின் மனைவி என்றும், சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாகவும் கூறி தொழில் தொடங்க தனக்கு ரூ. 1.80 லட்சம் கொடுக்குமாறு கோயுள்ளார்.

இதையடுத்து அந்த தொழிலதிபர் ஜெயலட்சுமி கேட்ட பணத்தைக் கொடுத்தார். ஆனால் வாங்கிய கடன் தொகையை ஜெயலட்சுமிதிருப்பித் தராமல் ஏமாற்றி விட்டார்.

இதுதொடர்பான புகாரை சிபிஐ விசாரித்து கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி மீது குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொள்ள கடந்த 16ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனநீதிபதி தண்டபாணி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அன்று ஜெயலட்சுமி ஆஜராகவில்லை.

இதையடுத்து 26ம் தேதியான வியாழக்கிழமை வர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்றுகாலை மதுரை உயர்நீதின்றக் கிளையில் கையெழுத்துப் போட்டு விட்டு மாலையில் கோவை நீதிமன்றத்திற்கு வந்தார்ஜெயலட்சுமி.

பின்னர் அவரிடம் குற்றப்பத்திரிக்கை நகலை நீதிபதி வழங்கினார். பின்னர் வழக்கை வருகிற 31ம் தேதிக்கு நீதிபதிதள்ளிவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+