கொலை வழக்கில் 19 நாளில் தீர்ப்பு!
சென்னை:
சென்னையில் நடந்த கொலை வழக்கில், 19 நாளில் தீர்ப்பு வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சுதா. பார்வையற்ற இவர் ஸ்டெனோவாக மத்திய கலால் துறையில் பணியாற்றிவந்தார். இவரது கணவர் திருமலை. இவர் கால் ஊனமுற்றவர்.
3வது விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் நீதிபதி அசோகன் இன்று தீர்ப்பு வழங்கினார்.திருமலை மீதான புகார் ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டிருப்பதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும்விதிப்பதாக நீதிபதி அசோகன் தீர்ப்பளித்தார்.
கொலை நடந்து 19 நாட்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்றுகூறப்படுகிறது. சென்னை மற்றும் மாநிலத்தின் சில விரைவு நீதிமன்றங்களில் மிக விரைவாக தீர்ப்புகள் வழங்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications