கொலை வழக்கில் 19 நாளில் தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடந்த கொலை வழக்கில், 19 நாளில் தீர்ப்பு வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சுதா. பார்வையற்ற இவர் ஸ்டெனோவாக மத்திய கலால் துறையில் பணியாற்றிவந்தார். இவரது கணவர் திருமலை. இவர் கால் ஊனமுற்றவர்.

மே மாதம் 8ம் தேதி குடும்பத் தகராறில், சுதாவை அடித்துக் கொலை செய்து விட்டார் திருமலை. கைது செய்யப்பட்ட அவர் மீதுஅம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கு பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டது.

3வது விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் நீதிபதி அசோகன் இன்று தீர்ப்பு வழங்கினார்.திருமலை மீதான புகார் ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டிருப்பதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும்விதிப்பதாக நீதிபதி அசோகன் தீர்ப்பளித்தார்.

கொலை நடந்து 19 நாட்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்றுகூறப்படுகிறது. சென்னை மற்றும் மாநிலத்தின் சில விரைவு நீதிமன்றங்களில் மிக விரைவாக தீர்ப்புகள் வழங்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+