புலிகள் விமானப்படையால் இந்தியாவுக்கு ஆபத்து: நார்வே தூதுக்குழு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகளின் விமானப்படையால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்று நார்வே அமைதிக் குழு எச்சரித்துள்ளது.

இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க நார்வே தூதுக்குழு மீண்டும் முயற்சி எடுத்து வருகிறது. இக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது விடுதலைப் புலிகள் வடக்குப் பகுதியில் விமான தளம் ஒன்றை உருவாக்கி இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அவர்கள் கூறுகையில், விடுதலைப் புலிகள் வசம் 2 இலகு ரக போர் விமானங்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் விமானங்களை நாங்கள் பார்க்கவில்லை. விமான தளத்தை மட்டும் தான் பார்த்தோம்.

விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருந்தால் அது மிகவும் ஆபத்தானது. இதனால் இலங்கையின் பாதுகாப்பு மட்டுமின்றி அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

வான் வெளியை பொறுத்த வரை அது இலங்கை அரசின் முழுக்கட்டுப்பாட்டில் தான் உள்ளது. புலிகள் விமானங்களை இயக்கினால் அது இலங்கை வான் வெளியை மட்டுமல்லாது சர்வதேச வான்வெளி சட்டதிட்டங்களை மீறிய செயலாக கருதப்படும்.

இலங்கை விமானப்படை, புலிகளின் விமான தளத்தின் மீது குண்டு வீசினால் அது போர் தொடங்குவதற்கு அச்சாரமாக அமைந்து விடும். இப்படி ஒரு சம்பவம் நடந்தால் நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விடுவோம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+