கடலூரில் கடல் கொந்தளிப்பு: மீனவர்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரில் இன்று காலை கடல் மட்டம் திடீரென உயர்ந்து, கடல்கொந்தளிப்பும் ஏற்பட்டதால் மீனவர்கள் பெரும் பீதியடைந்தனர்.
கடலூர் அருகே உள்ள தேவனாம்பட்டினம், சூனாம்பேடு, அக்கறைக்கோடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்றுகாலை வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடிக்கப் போன மீனவர்கள் பதற்றத்துடனும், அவசரம் அவசரமாகவும் கரைக்குத் திரும்பியதைப் பார்த்த கரையில் இருந்தமற்ற மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பீதியடைந்தனர்.
சுனாமி மீண்டும் வரப் போவதாக பயந்து போன அவர்கள் வீடுகளை விட்டு குடும்பம் குடும்பாக அப்பகுதிகளிலிருந்துவெளியேறினர்.
இதேபோல கன்னியாகுமரியிலும் இன்று கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. இதனால் குமரி முனையிலிருந்து விவேகானந்தர்பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications