5 தியாகிகளுக்கு ஓய்வூதியம்: ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஐந்து பேருக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், சென்னை கொருக்குப்பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த முகம்மது கனி, கோவை மாவட்டம் காரமடை, மகாத்மா காந்தி சாலையைச் சேர்ந்த கனகராஜன்,மதுரை மாவட்டம் பேரையூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த திருப்பதி ஆறுமுகம், பழங்காநத்தம்ஆர்.சி. தெருவைச் சேர்ந்த பாப்பையா, திருநகர் நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை ஆகிய சுதந்திரப்போராட்ட வீரர்கள், தங்களுக்கு மாநில அரசின் விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனமுதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இவர்களது மனுக்களைப் பரிவுடன் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, ஐந்து பேரின் தியாகங்களையும் போற்றி,சுத்திரப் போராட்ட வீரர் ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ஐந்து தியாகிகளுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ. 3000 ஓய்வூதியம், மருத்துவப் படி ரூ. 15 என மொத்தம் ரூ.3015 வழங்கப்படும். இது அவர்களது வாழ்நாள் முழுவதிற்கும் வழங்கப்படும்.

இந்த ஓய்வூதியத்திற்கான அரசு உத்தரவுகளை, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள்தியாகிகளிடம் நேரடியாக வழங்குவர் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+