வங்தேசத்திலிருந்து விடுதலையான மீனவர்கள் நாளை சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கதேச சிறைவாசத்திலிருந்து மீண்ட தமிழக மீனவர்கள் 6 பேரும் திங்கள்கிழமை தமிழகம் திரும்புகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீன் பிடிக்க சென்றபோது வழி தவறி வங்கதேசகடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதையடுத்து அவர்களை வங்கதேச கடற்படையினர் கைது செய்து சிறையில்ஆஜர்படுத்தினர்.
விடுதலை செய்யப்பட்ட 6 சென்னை மீனவர்களையும், வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர், தெற்குதிரிபுராவில் உள்ள இந்திய எல்லையில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் 6 மீனவர்களையும் சென்னைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச்செய்துள்ளனர். கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படும் மீனவர்கள் அங்கிருந்து ரயில் மூலம்நாளை சென்னை திரும்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications