குழந்தைகள் கடத்தல்: முக்கிய நபர் சிக்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ள, சென்னை திருவேற்காடு மலேசியன் சோசியல் சர்வீஸ்நிறுவனத்தின் மேலாளர் சோமசுந்தரம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை குடிசைப் பகுதிகளில் குழந்தைகளைத் திருடி மலேசியன் சோஷியல் சர்வீஸ் நிறுவனத்திற்கு விற்ற ஷேக்தாவூத், வரதராஜுலு, சலீமா, சபீரா, நவ்ஜீன் ஆகியோர் அடங்கிய கும்பலையும், மலேசியன் சோஷியல் சர்வீஸ்நிறுவன உரிமையாளர் ரவீந்திரநாத், அவரது மனைவி வத்சலா மற்றும் அவர்களது மகன் திணேஷ்குமார்ஆகியோரை போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மலேசியன் சர்வீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் சோமசுந்தரம் என்பவர்தலைமறைவாக இருந்து வந்தார். போலீஸார் அவரைத் தீவிரமாக தேடி வந்த நிலையில் சோமசுந்தரம் தற்போதுகோயம்பேடு அருகே போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மத்திய குற்றப் பிரிவு போலஸீார் தீவிர விசாரணை நடத்தியதில், சோமசுந்தரம் மூலம் 50க்கும் மேற்பட்டகுழந்தைகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்டு, விற்கப்பட்ட குழந்தைகளுக்கு போலியான பெற்றோர் மற்றும் முகவரியை ஏற்பாடு செய்துகொடுத்தது சோமசுந்தரம்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து திருடப்பட்ட 4 குழந்தைகளை சேலத்தைச் சேர்ந்தஸ்டெல்லா, சாரதா, ஜான் போஸ்கோ மற்றும் பிலோமினா ஆகியோர் சோமசுந்தரத்திடம் கொடுத்துள்ளனர். இந்தகடத்தல் தொடர்பாக அப்போதே சோமசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்சோமசுந்தரம் மட்டும் எப்படியோ விடுதலையாகி வந்து விட்டார்.

மதுரையைச் சேர்ந்த சோமசுந்தரம் மூலம் விற்கப்பட்ட குழந்தைகள் குறித்த தகவல்களை போலஸீார் சேகரித்துவருகிறார்கள். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சோமசுந்தரம் தற்போது சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+