கடவுளை வழிபடுவதில் தவறில்லை: அன்பழகன்
கோவை:
கடவுளை வழிபடுவது தவறு அல்ல. ஆனால் அழுக்கில்லாத, தவறு இல்லாத கடவுளை வழிபட வேண்டும். அதற்கேற்ப நம்மைபக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறினார்.
சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகள் பெரிய விஷயம் இல்லை. அதை நினைத்து நான் கவலை கொள்ளக் கூடாது. அடுத்து வரும்பொதுத் தேர்தலில், கடந்த இடைத் தேர்தலில் நாம் செய்த தவறுகளை கண்டறிந்து, களைந்து, முன்பை விட உத்வேகத்துடன்செயல்பட வேண்டும்.
இப்போதைய ஆட்சி உள்ள நிலையில், இரு தொகுதிகளில் வெற்றி பெறுவதன் மூலம் திமுகவால் ஆட்சி அமைத்து விட முடியாதுஎன்று எண்ணி திமுகவுக்கு மக்கள் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் சமுதாய உணர்வு குறைந்து வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது.அரசியல் நிலையில்தொடர் வெற்றிகளைப் பெற நமது அடிப்படைக் கருத்தை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள்மத்தியில் இதுபோன்ற உணர்வு இன்று இல்லை என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications